“யாரு புருஷன்னு கேக்குறாங்க…” வனிதா விஜயகுமார் ஆவேசம் !

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கடந்த வருடம் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 4 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் Single வாழ்கையை கெத்தாக வாழ்ந்து வரும் நிலையில்,
சற்று முன் நடிகை வனிதா சிவப்பு மனிதர்கள் என் படத்தில் கிரிமினல் வக்கீல் ஆக நடித்து வருகிறார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது அதில், விஜய் டிவியில் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து ஏன் விலகி இருங்கள் என்கிற கேள்விக்கு, “எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தரவில்லையே அதனால்தான் விலகினேன்” என்று பளீர்னு ஒரு பதிலைக் கூறினார். அதன்பிறகு மாதர் சங்கத்தை பற்றி கிழித்து தொங்க விட்டார். பின் “என்னை நிறையபேர் தனிப்பட்ட முறையில் Abuse செய்கிறார்கள், என்னை பார்த்தா, யாரு புருஷன்னு கேட்கிறார்கள்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
Views: -

2

0