“மனசு ரொம்ப வலிக்குது..” சமந்தாவுடன் விவாகரத்தா? நாக சைதன்யா பதில் !

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நடிப்பிற்கு ப்ரேக் விடுவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை S என மாற்றினார். நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவின.
ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் நாக சைதன்யா வாய் திறக்காமல் இருந்து அது மேற்கொண்டு பல சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இது குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார் நாகசைதன்யா.

அப்பேட்டியில், “திரைத்துறை வாழ்க்கை வேறு. தனிப்பட்ட வாழ்க்கை வேறு. என் அப்பாவும் அம்மாவும் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அதை நானும் ஃபாலோ செய்கிறேன் என்றார். ஆனால், சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது என் மனசுக்கு ரொம்ப வலிக்குது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியையும் மறக்கடிக்க இன்னொரு செய்து உடனே வந்து விடுகிறது என்றார்.
மேலும் ஊடகத்தில் இதைவிட பரபரப்பான செய்தி வந்தால் இதை மறந்து விடுவார்கள்.அதனால்,நானும் இது குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
Views: -

7

0