கடைசி வரை நீடித்த சிக்கல் தீர்ந்தது.. நாளை திட்டமிட்டபடி மாநாடு ரிலீஸ்.. குஷியில் சிம்பு ரசிகர்கள்..!!!


நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தீபாவளிக்கு மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி, நாளை மாநாடு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்புவின் திரைப்படம் வெளியாகுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். படத்திற்கு டிக்கெட் புக்கிக் விறுவிறுப்பாக நடைபெற்றது.இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை வெளியாகாது என டுவிட்டரில் அறிவித்திருந்தார். இது சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன தேதியில் மாநாடு ரிலீஸாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் படம் நாளை வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

24 November, 2021, 11:35 pm

Views: -

0

2

More Stories