“Puneeth மரணத்தை என்னால தாங்கிக்க முடியல” – வருத்தப்பட்ட அஜித் !

பிரபல மறைந்த நடிகரும், கன்னட சூப்பர்ஸ்டாருமான ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டும் இல்லாமல், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு தேசிய விருதை பெற்றுள்ளார். பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படம் தமிழில் தம் என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற புனித் ராஜ்குமார், இப்போது ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாகச் சேர்த்தனர்.
பின் இவர் இறந்து விட்டதாக செய்திகள் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். இதனால் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அஜித் அவர்கள் தனது PRO மூலம் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புனித் இறப்பை நான் எதிர்பார்க்கலை.. திடீர்னு இப்படி ஆகிடுச்சு, தாங்க முடியாத ஒன்னு” என்று கூறியுள்ளார்.

Views: -

0

0