“ஒருவேல ரெண்டு பேருக்கும் சண்டையா இருக்குமோ…?..” – சமந்தா செய்த குழப்பத்தால் திணறும் ரசிகர்கள்..!


மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது பெயரை நடிகை சமந்தா ‘S’என்று மட்டுமே பெயர் உள்ளது. அதே சமயம் இதை பார்த்த ரசிகர்கள், இருவருக்குள் சண்டை, கருத்து வேறுபாடா என்று சிந்தித்து வருகிறார்கள். ஆனால், அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.

3 August, 2021, 2:15 pm

Views: -

0

2

More Stories